Friday 27 May 2016

மனதலைகள்

ஆழ்மனதின் ஆசைகளை
கரையோரம் சேர்க்கும் மனதலைகள் ,
மனதலைகள் கரை சென்று விழுமோ?
என் மனதை அழைத்து கொண்டு வருமோ?

தனிமையின் தென்றல்
இனிமையின் இன்பத்திற்காக , வீசும்
சிறு காதல் ஓவியம்…

ஆகாய ஆனந்த கண்ணீரில்
ஆனந்த நடைபயணம்
ஆனந்தத்தில் ஆன்ந்தம்
எனை தொடரும்
உன் காலடிபாதம் .

விழி மூடாமற் பாற்த்திருந்தேன்
விழி திறந்தே தூங்கும் வண்ண மீனகளை
விண் மீனாய் நீ தெரிந்தாய் .

பச்சை மூங்கில் குடிலில்
சிறு வண்டு துளைத்த துளையில்
என் அகம் தொட்ட தேன்நீரை,
பருகிய பூமகளின் முந்தானை.

உயர்ந்த மரங்கள்
உறங்கிய உயிர்கள்
உறைத்திடும் குளிரில்
உயிர்தந்த
உன் சுவாச காற்று.

நிலா முற்றம்
முழு நிலவின் வெளிச்சம்,
உன் இருவிழியின் மிச்சம் .

நான் மட்டும் உரையாடும் கவியில்
கவிக்கு உயிர் சேர்க்கும்
காவியத்திற்காக........

Tuesday 24 May 2016

அறிவேன் எப்போது

சொற்களை சொக்க வைத்த சுகமே
நிழலாய் தொடரும் நிஜமே
உறக்கத்தின் கனவுகளின் கவியே
இதய துடிப்பை மூச்சுகாற்றால் இசைக்கும் சங்கீதமே
நினைவுகளில்  நிறைந்திருக்கும் நீயே , உன்னை
அறிந்தேன் , அறியேன் நீ யார் என்று ,
அறியேன் இப்போது,
அறிவேன் எப்போது.