Tuesday 10 April 2018

துணைவி.....!!

செல்லமாய் வளர்ந்த
செல்வ மகள்..

பலவும் கற்று அறியாது,
கற்பிக்கும்
பகுத்தறிவாளி...

தன் கனவுகள் துலைத்து
என் கனவிற்காக உழைக்கும்,
நிழலுலகின் மங்கை....

மெளனம் எனும் மொழியால்,
என் வாழ்வை மாற்றி
அமைத்தவள்...

தேவைகள் எதுவென
அறிந்து செலவழிக்கும்
செலவாலி (சிக்கனவாதி)

கெஞ்சல் எனும்
கொஞ்சலால் ,
நினைவில் நிற்பவள்...

துன்பம் மலர்ந்த காலத்தில்,
துனையாய் நின்ற
துணைவி..

                                           காதலுடன் கணவன்!!!!!!

No comments:

Post a Comment