Monday 21 March 2016

விழியின் கதிர்கள்

வென்னிற மனதை
கருநிற விழியில் கண்டு வியந்தேன்,
வியந்ததின் விந்தைகள்
உன் புருவத்தின் புதிர்கள்!
எத்திசையாய் மாறத் துடித்தேன்
உனது  இருவிழி தேடலிற்காக,
மாற்றத்தில் புதைந்தேன்
உன் சுவாசகாற்றில்!!
முழு நிலவின் பிரகாசமாய்
வென்னிற விழியின் கதிர்கள்,
பிரகாசத்தின் மீதான ஏக்கம்
உன் இமையினது  மீதான கோபம் !!!
மௌனத்தின் கவிதையாய்
கண்ணீர் ததும்பிய கண்கள் ,
கவிதையை துண்டிக்க துடிக்கும்
உன் துணைவனது
ஆனந்த சொற்களின் கவிதை.

No comments:

Post a Comment